உத்திரமேரூர், ஜூன் 19:உத்திரமேரூர் அடுத்த கடல்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (35). உத்திரமேரூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சுமதி (25) என்பவரிடம் ₹90 ஆயிரத்தை கடனாக கொடுத்துள்ளார். பின்னர், கொடுத்த கடன் தொகையை சுமதியிடம் திரும்ப கேட்டுள்ளார். அதற்கு சுமதி, பணத்தை திரும்ப தர மறுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து செல்வகுமார், உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.