கூடுவாஞ்சேரி, ஜூன் 18: முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொது கூட்டத்தில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி திமுக சார்பில், முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரியில் நடந்தது.ஒன்றிய செயலாளரும் பேரூராட்சி முன்னாள் தலைவருமான எம்.கே.தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், நிர்வாகிகள் கே.பி.ஜார்ஜ், அஞ்சூர் ராஜேந்திரன், பத்மநாபன், முன்னாள் வார்டு கவுன்சிலர் டில்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பொறுப்பாளர் ஜி.கே.லோகநாதன் வரவேற்றார்.
.