உத்திரமேரூர், ஜூன் 13: உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி எல்லம்மாள். இவர்களது மகள் தேவகி (20). இவருக்கும், திருப்புலிவனத்ைத சேர்ந்த சிங்காரம் (28) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.திருமணத்துக்கு பின் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, தேவகி தாய் வீட்டுக்கு சென்றுவிடுவார்.