சிவகங்கை, ஜூன் 12: வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக பண மோசடி செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். காரைக்குடியை சேர்ந்தவர் வைரவபாலன். இவர் காரைக்குடியில் வெளி நாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் சவேரியார்பட்டிணத்தை சேர்ந்த சேவியர் மகன் பயஸ்ரூபன்(29), தஞ்சாவூரை சேர்ந்த சங்கர் மகன் சந்தோஸ்குமார் ஆகிய இருவரும் தங்கள் மூலம் வெளிநாட்டிற்கு ஆள் அனுப்பும் படியும், அனுப்பும் ஆட்களுக்கு நல்ல வேலை வாங்கித்தரப்படும் என்றும் கூடுதல் கமிசன் தருவதாகவும் கூறியுள்ளனர்.