புழல், ஜூன் 12: செங்குன்றம் அருகே தார் ஷீட் தயாரிக்கும் கம்பெனியில் நேற்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது.
அம்பத்தூர் சந்திரசேகரபுரம் 3வது தெருவில் வசித்து வருபவர் சங்கர் (48). இவர், செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பாயசம்பாக்கம் பகுதியில் தார் ஷீட் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த 10 பேர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் நெருப்பை சரிவர அணைக்காமல் தொழிலாளர்கள் சென்று விட்டனர். அந்த நெருப்பு புகைந்து கொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை சங்கர் மற்றும் தொழிலாளர்கள் வழக்கம் போல் கம்பெனிக்கு வந்தனர்.