கூடுவாஞ்சேரி, ஜூன் 5: வண்டலூர் நல்லம்பாக்கம் ஊராட்சியில், ₹12 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் பொது கிணறு, 3 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராததால், குடிநீரின்றி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, காந்திநகர், மல்ரோசாபுரம் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், பொதுமக்களின் தேவைக்காக, நல்லம்பாக்கம் ஊராட்சியில் ₹12 லட்சம் மதிப்பில் குடிநீர் பொது கிணறு அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால், தண்ணீரின்றி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நல்லம்பாக்கம் ஊராட்சி 9வது வார்டு வலம்புரிநகர் 1வது தெருவில் ஆயிரம் பேர் வசிக்கிறோம்.