சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி சேவை மைய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

சேத்தியாத்தோப்பு, மே 25: சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ளது இடையன்பால்செரி கிராமம். இக்கிராமத்தில் உள்ள பஜனை மட தெருவில் அமைந்துள்ள ஊராட்சி சேவை மையக்கட்டிடமானது பல லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் முடிந்து நீண்ட நாட்களாவதால் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது என கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கும் போது, இந்த ஊராட்சி சேவை மையக்கட்டிடமானது அரசின் பல்வேறு சேவைகள் கிராமமக்களுக்கு தடையில்லாமல் கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் எப்போது பயன்பாட்டுக்கு வரப்போகிறது என தெரியவில்லை. தினசரி கிராமமக்களுக்கு பயனுள்ள விதத்தில் இந்த ஊராட்சி சேவை மையக்கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Related Stories: