ஆத்தூர் கோயிலில் வருஷாபிஷேகம்

ஆறுமுகநேரி, மே24:  ஆத்தூர் வடக்கு ரதவீதி  நல்லபிள்ளையார்கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.  ஆத்தூர் வடக்கு ரதவீதி  நல்லபிள்ளையார் கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று காலை 9 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை, விமான அபிஷேகம் நடந்தது.  பகல் 11 மணிக்கு மூலவர் அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  

விழா  ஏற்பாடுகளை ஆத்தூர் வடக்கு ரதவீதி  நல்லபிள்ளையார் கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.

Related Stories: