தவறி விழுந்த தொழிலாளி பலி

தூத்துக்குடி, மே24:  தூத்துக்குடி அண்ணா நகர் 12வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சேகர் (50). வெல்டிங் தொழிலாளி. கடந்த 9ம் தேதி மாலை தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் ஆஸ்பட்டாஸ் கூரை அமைக்கும் பணியில் சேகர் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து உடன் வேலை பார்த்தவர்கள் சேகரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் இழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: