திருச்செந்தூர் பகுதியில் இன்று மின்தடை

திருச்செந்தூர், மே 24: திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூர், காயல்பட்டணம் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் இன்று(24ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புன்னகாயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர் சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களுர் ஆகிய ஊர்களுக்கு மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: