மஞ்சூர், மே 23: தொழிலாளியை தாக்கிய கரடியை பொதுமக்கள் அடித்து கொன்றதாக வாட்ஸ் ஆப்பில் பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.மஞ்சூர் பகுதியில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை கரடி கடுமையாக தாக்கியதில் படுகாயத்துடன முகம், கை, கால்களில் ரத்தம் கசிவது போலவும் மற்றும் தொழிலாளியை கடித்த கரடியை பொதுமக்கள் சிலர் அடித்து கொன்று போட்டதாக படங்கள் நேற்று முன்தினம் வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதலங்களில் வெளியானது.