குறிச்சி குளத்தில் மூழ்கி மாணவன் பலி

கோவை, மே.23:கோவை குனியமுத்தூர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீத்(37). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மகன் இர்பான் கான்(12). 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் சிலருடன் போத்தனூர்-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள முனியப்பன் கோவில் பின்புறம் குறிச்சி குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதில், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: