கரூர் சுக்காலியூர் சாலையில் கூடுதல் மின்விளக்கு அமைக்கப்படுமா? வாகனஓட்டிகள் எதிர்பார்ப்பு

கரூர், மே 21: கரூர் சுக்காலியூர் சாலையில் தோரணக்கல்பட்டி அருகே கூடுதலாக தெரு விளக்கு அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திருமாநிலையூர் பகுதியில் இருந்து சேலம், மதுரை, திருச்சி பைபாஸ் சாலைகளை இணைக்கும் சாலை உள்ளது.

இந்த சாலையின் வழியாக திருச்சி, கரூர் போன்ற பகுதிகளில் இருந்து மதுரை, சேலம் போன்ற புறநகர்ப்பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த சாலையின் வழியாக செல்கிறது.இந்நிலையில், இந்த சாலையில் தோரணக்கல்பட்டி பிரிவு அருகே கருப்பம்பாளையம் போன்ற பகுதிகளுக்கு உட்பிரிவு சாலைகள் பிரிகிறது. இந்த பகுதியை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன.ஆனால், இந்த பிரிவுச் சாலைப்பகுதியில் தேவையான அளவு தெரு விளக்கு இல்லாத காரணத்தினால், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு இந்த பகுதியை கடக்கும் நிலை உள்ளது.எனவே, இந்த பகுதியில் கூடுதலாக தெரு விளக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பது இந்த பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது. எனவே, அதிகாரிகள் இந்த பகுதியில் கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்திட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என  வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: