விருத்தாசலம், மே 21: விருத்தாசலத்தில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகேயுள்ள முடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் சிவநாதன் (41). இவர் விருத்தாசலம் அரசு பேருந்து பணிமனையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று விருத்தாசலத்தில் இருந்து கொடுக்கூர் வரை செல்லும் அரசு பேருந்தை ஓட்டிச் சென்றார். ஆலடியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் இளையகுமார் (31) என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார். கடைவீதி பாலக்கரை பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்ற போது, விருத்தாசலம் தீர்த்தமண்டபத்தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் வினாயகமூர்த்தி (39) மற்றும் அவருடன் 3 பேர் பைக்கில் வந்து பேருந்தின் குறுக்கே பைக்கை நிறுத்தியுள்ளனர்.