திருவெண்ணெய்நல்லூர், மே 15: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சின்னசெவலை பகுதியில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் எடுத்து செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அப்பகுதிக்கு சென்று மாட்டு வண்டிகளை மடக்கை விசாரணை செய்தனர். அதில் அண்ணாமலை மகன் ராதாகிருஷ்ணன்(39), கிருஷ்ணன் மகன் நாதமணி(42), மாயவன் மகன் பெருமாள்(47), நாகராஜன்(47) என்பது தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்து 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.