குளித்தலை மே 7: கரூர் மாவட்டம் குளித்தலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் பூச்சொரிதல் மற்றும் கம்பம் நடும் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது விழாவையொட்டி குளித்தலை நகரத்தில் மணத்தட்டை நாப்பாளையம், வைகநல்லூர் அக்ரஹாரம், அண்ணாநகர், உழவர்சந்தை, பாரதிநகர், பஜனைமடம், பேராளம்மன் கோவில் தெரு, காவல்காரத்தெரு, கீழக்கொடிக்கால் தெரு, கொள்ளம்பட்டறை தெரு, மலையப்ப நகர், பள்ளிவாசல் தெரு, பெரியார் நகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் ஏராளமான அலங்கார வண்டிகளுடன் அம்மனை அலங்கரித்து, பேண்டு வாத்தியம், தாரை தப்பட்டையுடன் முக்கிய வீதியின் வழியாக வலம் வந்து இறுதியாக மாரியம்மன் கோயிலையடைந்து அனைத்து பூக்களையும் படைத்து சாமி தரிசனம் செய்தனர். விழாவில் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி சுகுமார் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்காவல்படையினர் ஈடுபட்டு இருந்தனர்.