களக்காடு, ஏப். 26: களக்காடு கோயிலில் மண்டகப்படிதாரர்கள் கூட்டம் நடந்தது. களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் திருக்கோயில் வைகாசி திருவிழா, வரும் மே 9ம் தேதி தொடங்குகிறது. 17ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு திருவிழா மண்டகப்படிதாரர்கள் கூட்டம் கோயிலில் நடந்தது. இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி முருகன் தலைமை வகித்தார். இதில் 1ம் திருநாள் முதல் 10ம் திருநாள் வரையிலான திருவிழா மண்டகப்படிதாரர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.