கோவை மாவட்ட உயரதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

கோவை, ஏப். 25: கோவை மாவட்ட அரசு உயரதிகாரிகளுடன் தமிழக தேர்தல் ஆணையர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ராசாமணி தலைமை வகித்தார். இதில் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். இதில் வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு குறித்தும், கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்தும், போலீசார் பின்பற்ற வேண்டியவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், கோவை மாவட்ட எஸ்.பி சுஜித்குமார், மாவட்ட அளவிலான அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: