தூத்துக்குடி, ஏப்.25: சாயர்புரத்தில் நடந்த ஜி.யு.போப் 200வது ஆண்டு பிறந்த தினவிழாவில் பேராயர் தேவசகாயம் கலந்து கொண்டார். ஜி.யு. போப் 200வது பிறந்த தினவிழா சாயர்புரத்தில் உள்ள போப் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமை வகித்தார். சாயர்புரம் சேகரத்தலைவர் குரோவ்ஸ் பர்னபாஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். போப் கல்வியியல் கல்லூரி தாளாளர் கிறிஸ்டோபெல் ஆனந்த் வரவேற்றார். சாயர்புரத்தைச் சேர்ந்த ஜேக்கப் ராஜன், ஜி.யு. போப் குறித்து பேசினார். கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் போப் கல்வியியல் கல்லூரியில் பல்கலைக்கழக தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு போப் பொறியியல் கல்லூரி தாளாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளருமான ராஜேஷ் ரவிசந்தரின் தந்தை ராஜாமணி நினைவாக வழங்கப்படும் தங்கப்பதக்கங்களை நார்வே பேராசிரியர் டேனியல் கருணாகரன் வழங்கினார்.