சிவகங்கை, ஏப்.25: காளையார்கோவில் அருகே விளாங்காட்டூரில் உள்ள அய்யனார் கோவில் உண்டியல் பணத்தை திருடிய நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலலியுறுத்தி சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விளாங்காட்டூர் கிராமத்தினர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், காளையார்கோவில் ஒன்றியம் விளாங்காட்டூரில் அய்யனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாசி மாதம் நடந்து முடிந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் உண்டியலில் ரூ.10 ஆயிரம் வரை பணம் இருந்தது.