காஞ்சிபுரம், ஏப்,23: காஞ்சிபுரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம், வளத்தீஸ்வரன் கோயில் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் (45). தனியார் ஹோட்டல் ஊழியர். கடந்த 19ம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பிய கோட்டீஸ்வரன், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.