திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் சண்முகையா வாழ்த்து

ஓட்டப்பிடாரம், ஏப்.22:  ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே.19ம்தேதி நடக்கிறது. இத்தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது. அதில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளராக ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியச் திமுக செயலாளரான சண்முகையா அறிவிக்கப்பட்டார். அன்றைய தினம் மாலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியுடன் ஓட்டப்பிடாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பிரசாரத்தை துவக்கினார்.

இந்நிலையில் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த வேட்பாளர் சண்முகையா அவரிடம் வாழ்த்து பெற்றார். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., துணைப்பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, மகளிரணிச் செயலாளர் கனிமொழி,  தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாணவரணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர் உடனிருந்தனர்.

Related Stories: