ஓட்டப்பிடாரம், ஏப்.22: ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே.19ம்தேதி நடக்கிறது. இத்தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது. அதில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளராக ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியச் திமுக செயலாளரான சண்முகையா அறிவிக்கப்பட்டார். அன்றைய தினம் மாலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியுடன் ஓட்டப்பிடாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பிரசாரத்தை துவக்கினார்.