ஜோலார்பேட்டை, ஏப்.22: ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராகுல்(20), கார் டிரைவர். அச்சமங்கலத்தை சேர்ந்த நடராஜனின் மகன்கள் அனுமுத்து(27), அஜித் (24) ஆகியோர் கடந்த 14ம் தேதி ராகுலிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அங்குள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நின்றிருந்த ராகுலிடம் அனுமுத்துவும், அஜித்தும் தகராறு செய்தனர். இதில் ராகுலை, கத்தி மற்றும் இரும்பு ராடால் சரமாரி தாக்கியுள்ளனர். ராகுலும் திருப்பி கத்தியால் தாக்கினாராம்.