அரசு ஊழியர் சங்க கூட்டம்

சிவகங்கை, மார்ச் 22: சிவகங்கையில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை கூட்டம் நடந்தது. கிளைத்தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் முத்து வரவேற்றார். மாநில செயலாளர் ராபர்ட், மாவட்ட செயலாளர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் ஹக்கீம், துணைத்தலைவர்கள் கந்தசாமி, முத்துமாடன், சுகுமாறன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அரசு ஊழியர்களுக்கு 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். 2017ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: