உடன்குடி, மார்ச் 22: உடன்குடி நகர அதிமுக அலுவலகத்தில், உடன்குடி ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முருங்கை மகாராஜா தலைமை வகித்தார். நகர செயலாளர் ஜெயகண்ணன் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி கட்சியான பாஜவுக்கு தூத்துக்குடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச்செய்வது கடமையாகும். ஒவ்வொரு தொண்டனும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து வீடு, வீடாகச் சென்று தேர் தல் பிரசாரம் செய்து அதிக வாக்குகள் சேகரிக்க வேண்டும், என்றார்.