பெரம்பலூர், மார்ச் 22: பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூரிலிருந்து திட்டக்குடி வரை தேசியநெடுஞ் சாலை என்.ஹெச்.45ம், பெரம்பலூரிலிருந்து அரியலூருக்கும், துறையூருக்கும், ஆத்தூருக்கும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளன. இவைதவிர கிராமப்புறங்களில் செல்லும் ஊரக சாலைகள் உள்ளன. இவற்றில் தேசிய நெடுஞ்சாலைதவிர இதர சாலைகளில் அந்தந்தப் பகுதி வயல்களில் விதைத்து அறுவடைசெய்த சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சிறுசோளம் மற்றும் துவரை, கொண்டக்கடலை ஆகியப் பயிர்கள், சிறுதானியங்களை பிரித்தெடுப்பதற்காக சாலைகளில் பரப்பிவைத்துக் காயவைக்கின்றனர். இவை குறிப்பிட்ட வெப்பத்தில் காய்வதாலும், சிறுசிறு வாகனங்கள் அவற்றில் பயணிப்பதால் மிளார்களில் இருந்து அவை உதிர்வதால் பணம் செலவின்றி எளிதில் பிரித்தெடுத்து விற்பனைக்காகவோ, உணவுக்காகவோ பயன்படுத்த முடியும். இதற்காக பெரம்பலூர் செட்டிக்குளம்சாலை, கிருஷ்ணாபுரம் கைகளத்தூர்சாலை, வேப்பந்தட்டை அனுக்கூர் சாலை, வி.களத்தூர் கை.களத்தூர் சாலை, திருமாந்துறை அகரம்சீகூர் சாலை, மருதையான்கோயில் திட்டக்குடி சாலை, ஆலத்தூர்கேட் கொளக்காநத்தம் சாலை, ஆலத்தூர்கேட் செட்டிக்குளம் சாலை, அருமடல் கீழப்புலியூர் சாலை, குன்னம் வேப்பூர் சாலை, குன்னம் கொளக்காநத்தம் சாலை, வேப்பூர் வயலப்பாடி சாலை போன்ற கிராமப்புற இணைப்புச் சாலைகளில் சிறுவிவசாயிகள் சிறுதானியக் கதிர்க ளைக் காயவைக்கின்றனர்.