பெரம்பலூர், மார்ச் 20: பெரம்பலூர் சங்குப்பேட்டை ஷெரீப் காம்ப்ளக்சில் ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதில் ஆண்களுக்கு சிசிடிவி கேமராவின் பாதுகாப்பு அலாரம் மற்றும் ஸ்மோக் டிடெக்டர் பொருத்துதல் மற்றும் சேவை குறித்தப் பயிற்சி 13 நாட்களும், ஏசி மற்றும் பிரிட்ஜ் பழுது நீக்கல் பயற்சி, கட்டுமானத் தொழில்நுட்பப் பயிற்சி 30 நாட்களும், புகைப்பட பிராமிங், லேமினேசன் அண்டு ஸ்கீரீன் பிரிண்டிங் பயிற்சி 10 நாட்களும், இருசக்கர வாகனம் பழுது நீக்கல் பயிற்சி 30 நாட்களும் நடத்தப்படுகிறது. பெண்களுக்கு எம்பிராய்டரி அண்டு பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி 30 நாட்களும், ஆடை அணிகலன் தயாரிப்புப் பயிற்சி, பொம்மை தயாரித்தல் பயிற்சி ஆகியன 13 நாட்களும் நடத்தப்படுகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் தையற் கலை பயிற்சி, அழகுக்கலை பயிற்சி 30 நாளும், அப்பளம், ஊருகாய் மற்றும் மசாலா தயாரிப்புப் பயிற்சி, அகர்பத்தி தயாரிப்புப் பயிற்சி 10 நாட்களும், செல்போன் பழுது நீக்கல் பயிற்சி 30 நாட்களும், பாஸ்ட் புட் தயாரித்தல் பயிற்சி 10 நாட்களும், மலர்ச்செடி சாகுபடி பயிற்சி, கறவை மாடு வளர்த்தல் பயிற்சி, காய்கறி நாற்றங்கால் மேலாண்மை மற்றும் சாகுபடிப் பயிற்சி, ஆடு வளர்ப்புப் பயிற்சி, காகித அட்டை, உறை மற்றும் பைல் தயாரிப்புப் பயிற்சி ஆகிய 10 நாட்களும், சணல் பை தயாரிப்புப் பயிற்சி 13 நாட்களும் நடத்தப்படுகிறது.