அதிமுக தொண்டர் மர்மச்சாவு

இளையான்குடி, மார்ச் 19: இளையான்குடி அருகே பிரசித்திபெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று மாலை கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் குழாய் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். அதிமுக கறைவேஷ்டி கட்டியிருந்தார். இடது கையில் கருப்புசாமி என்றும், வலது கையில் எம்ஜிஆர் என்றும் பச்சை குத்தியிருந்தார். தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் அதிமுக தொண்டர் என தெரிகிறது.

Related Stories: