கோவிந்தம்பாளையம் பகுதியில் சாலையோர குப்பைகளால் சுகாதார கேடு

கரூர், மார்ச் 19: சாலையோர குப்பையால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கரூர் கோவிந்தம்பாளையம் பகுதி கரூரில் இருந்து கோவை செல்லும் பைபாஸ் சாலையில் உள்ளது. விரிவாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் நாளுக்கு நாள் கட்டிடங்கள் பெருகி வருகின்றன. குப்பைத்தொட்டிகள் வைக்கப்படவில்லை. இருக்கின்ற குப்பை தொட்டிகளும் நிரம்பி வழிகின்றன. எவ்வளவு தான் அகற்றினாலும் மீண்டும் மீண்டும் கோவிந்தம்பாளையம் பகுதியில் குப்பைகள் மலைபோல குவிகிறது. துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அவ்வப்போது இதற்கு தீவைத்து எரிக்கின்றனர். சாலையோர குப்பைகளை அகற்றவும், சாலையோரத்தில் குப்பைக்கு தீ வைப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: