கடலில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

துரைப்பாக்கம், பிப். 26: வேங்கைவாசல் நூக்கம்பாளையம் மாணிக்கம் நகர் கக்கன் தெருவை சேர்ந்த ஆசீர்வாதம். இவரது மகன் சந்தோஷ் (16). மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் சிறுவன் சந்தோஷ், தனது நண்பர்களுடன் பைக்கில்  ஈஞ்சம்பாக்கம் பாரதி அவென்யூ கடற்கரைக்கு சென்றான். அங்கு நண்பர்களுடன் கடலில் குளித்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி,   சந்தோஷ் கடலுக்குள்  இழுத்து செல்லப்பட்டான். இதை பார்த்து நண்பர்கள் கூச்சலிட்டனர். அதை கேட்டு, அப்பகுதி மீனவர்கள் ஓடிவந்து, கடலில் குதித்து சிறுவனை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் சந்தோஷின் சடலம் அதே பகுதியில் கரை ஒதுங்கியது.

புகாரின்படி நீலாங்கரை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: