ஸ்பிக்நகர், பிப். 22: தூத்துக்குடி அருகே வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தூத்துக்குடி ஸ்பிக்நகர் அருகேயுள்ள ஜெஎஸ் நகரை சேர்ந்த காளிமுத்து மகன் மங்களம் (21). ஐடிஐ படித்துள்ள இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இருப்பினும் போதிய வருமானம் இல்லாததால் விரக்திக்கு ஆளான மங்களம், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து விரைந்துசென்ற முத்தையாபுரம் போலீசார், உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.