தூத்துக்குடி, பிப்.21: சீர்மரபினர் சமுதாயத்தினர் (டிஎன்சி) என்பதனை சீர்மரபினர் பழங்குடியினர் (டிஎன்டி) என மாற்றக்கோரிய மனுக்களை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வருவாய் நிர்வாக முதன்மைச் செயலர் அதுல்யா மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இணை ஆணையர் லட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குநர் மதிவாணன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குநர் சம்பத், கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், குழுவின் தலைவர் அதுல்யா மிஸ்ரா பேசியதாவது: சீர்மரபினர் சமுதாயத்தினர் என்ற பெயரினை சீர்மரபினர் பழங்குடியினர் என மாற்றம் செய்து ஆணையிடுமாறு கோரிக்கைகள் வரப்பெற்றது. சீர்மரபினர் பட்டியலில் 68 ஜாதிகள் உள்ளன. இதுதொடர்பாக பல்வேறு அலுவலகங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டது.