தூத்துக்குடி, பிப். 21: தூத்துக்குடி, திருச்செந்தூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று 3வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சேவை மையங்கள் மூடப்பட்டன. பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கினர். தூத்துக்குடி, திருச்செந்தூரில் 3வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. போராட்டம் காரணமாக பி.எஸ்.என்.எல். சேவை மையங்கள் மூடப்பட்டன. தொலைபேசி அலுவலகங்களில் பணியாளர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் தொலைபேசி பழுது நீக்குதல், பில் கட்டணம் செலுத்துதல், இணையதள சேவை உள்ளிட்ட பணிகள் முடங்கின. தூத்துக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜீவானந்தம், சுப்பையா, பர்னபாஸ், சித்திக், பால்சாமி, அம்பிகாவதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றடனர்.