மார்த்தாண்டம், பிப். 20 மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், வெள்ளிச்சந்தை அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
குளச்சல் ஏஎஸ்பி கார்த்திக், வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி ஆகியோர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர். அவர்கள் பேசுகையில், பைக்கில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். குடிபோதை மற்றும் அதிவேகத்தால் விபத்துக்கள் அதிகம் நடந்து வருகின்றன. வாகனங்களை இயக்கும்போது விதிமுறைகளை கடைபிடித்து கவனமாக ஓட்ட வேண்டும்.