ஜூன் 25ல் மாவட்ட ஊராட்சி கூட்டம்

நாகர்கோவில், ஜூன் 14: குமரி மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியன்ட் தாஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: மாவட்ட ஊராட்சி சாதாரண கூட்டம் ஜூன் 25ம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வருவாய்துறை, போக்குவரத்து காவல்துறை, தென்னக ரயில்வே, மாநில நெடுஞ்சாலைத்துறை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், கதர் கிராம தொழில் வாரியம் குறித்து விவாதம் செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

The post ஜூன் 25ல் மாவட்ட ஊராட்சி கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: