கொட்டாரம் அருகே வீட்டுக்குள் இறந்து கிடந்த பெண் தூய்மை பணியாளர்

நாகர்கோவில், ஜூன் 11 : கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பெருமாள்புரத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுதா (52). இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக இருந்து வந்தார். சம்பவத்தன்று சுதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்று காலை முதல் இரவு வரை அவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வர வில்லை. வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இது குறித்து நாகர்கோவிலில் உள்ள சுதாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டுக்குள் சுதா இறந்து கிடந்தார். இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான் சுதா எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும் என போலீசார் கூறினர்.

The post கொட்டாரம் அருகே வீட்டுக்குள் இறந்து கிடந்த பெண் தூய்மை பணியாளர் appeared first on Dinakaran.

Related Stories: