ஆறுமுகநேரியில் கோசல்ராம் பிறந்த நாள் விழா

ஆறுமுகநேரி, பிப். 15:  ஆறுமுகநேரியில் தியாகி கே.டி.கோசல்ராம் பிறந்த நாள் விழா நடந்தது. கே.டி.கோசலராம் பேரவை சார்பில் நடந்த இவ்விழாவுக்கு பேரவையின் மாநில தலைவர் பற்குணப்பெருமாள் தலைமை வகித்தார். பேரவையின் ஆலோசகர் முருகேசபாண்டியன் வரவேற்றார். மாநில செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் சுந்தரலிங்கம், பொதுச்செயலாளர் மரிய ஸ்டார்லின், மாநில துணைத் தலைவர் மூத்தீஸ்வரி அழகசேன், தூத்துக்குடி மண்டல தலைவர் பரமசிவன், செயலாளர் இசக்கிமுத்து,  தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றத் தலைவர் சோழர் செல்வின் முன்னிலை வகித்தனர். முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற அம்மா ஜெ தீபா பேரவை மாவட்டச் செயலாளர் தொண்டர் சுப்பிரமணி, மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் நலிந்தோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினார். நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை  பரிபாலன சங்க செயற்குழு உறுப்பினர் பிரபாகர் வாழ்த்திப் பேசினார். விழாவில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் எஸ்.டி. சண்முகம், தூக்குமேடை தியாகி ஆறுமுகநேரி காசிராஜன், மற்றும் ராஜகோபால் படங்களை திறந்துவைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் ஆறுமுகநேரி நகர்நல மன்றத் தலைவர் பூபால்ராஜன், தமாகா மாநில செயற்குழு உறுப்பினர் தங்கமணி, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவி தங்கத்திலகா, ராஜாராம் மோகன்ராய், ஆனந்தவேல், நகல காங்கிரஸ் தலைவர் ராஜாமணி, மாவட்ட காங்கிரஸ் பேச்சாளர் சிவகணேசன், முன்னாள் கவுன்சிலர் முருகேசன், கே.டிகே. பேரவையின் மகளிரணி துணைத் தலைவர் பொன்கலைமதி, யோகராஜ் பங்கேற்றனர். இசக்கிமுத்து நன்றி கூறினார். ஏற்பாடுகளை கே.டி.கோசல்ராம் பேரவையினர் செய்திருந்தனர்.

Related Stories: