தேர்தல் நாடகம் அன்னை தெரசா பல்கலை மாநிலத்தில் முதல் இடம்

திண்டுக்கல், பிப். 8: தேர்தல் விழிப்புணர்வு நாடகத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. நூறு சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் புதிய வாக்காளர்களுக்கு ஜனநாயகத்தின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதன் ஒருபகுதியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்க்கு கவிதை, பேச்சு, கட்டுரை, ஓவியம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ன்னையில் நடந்த மாநில போட்டியில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவியர் 12 பேர் குறுநாடகத்தில் முதலிடம் பெற்றனர். இதற்காக சென்னை தலைமை தேர்தல் அதிகாரியிடம் ரூ.10 ஆயிரம் பரிசு, சான்றிதழ் பெற்றனர். இவர்களை கலெக்டர் வினய் பாராட்டு வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: