பல்லடம் பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் பணம் பறிப்பு

பொங்கலூர், ஜன..4:திருப்பூர் மாவட்டம் பல்லடம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்  எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று மாலை பேருந்து நிலையத்தில் உள்ளே வந்த அரசுப்பேருந்து ஒன்றில் இருந்து  கர்ப்பிணி ஒருவர் இறங்கி நடந்து சென்றார். அவரை பின் தொடர்த சுமார் 60 வயதுடைய மூதாட்டி ஒருவர் அய்யோ திருடி திருடி என அலறியவாறு கர்ப்பிணியை பின்தொடர்ந்து  விரட்டியபடி சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுனர் சிலர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக அப்பெண் பதில் கூறியதால் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் அந்த பெண்ணை பிடித்து நிறுத்திவைத்து, உடனடியாக பல்லடம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

 இதையடுத்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார், கர்ப்பிணிப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.