கள்ளக்குறிச்சி விவகாரம் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

கோவை, ஜூன் 21: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விஸ்வ பாரத் மக்கள் கட்சி தேசிய பொதுச்செயலாளர் பாபுஜி சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வட தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களால் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு மரணங்கள் நடந்துள்ளது. மெத்தனால் கலந்த எரிச்சாராயம் குடிப்பதால் கண் பார்வை இழந்து, உயிர்பலி ஏற்படுகிறது. இதனால், அந்த குடும்பங்களின் நிலை கேள்விகுறியாகிறது.

இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற மரணங்கள் ஏற்படாமல் இருக்க அரசு கவனம் செலுத்த வேண்டும். பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும். கஞ்சா, அபின் மற்றும் போதை பழக்க வழக்கங்களை தடுக்க முதல்வரின் மேற்பார்வையின் கீழ் தனிப்படை அமைத்து வருங்கால தமிழகம் போதை இல்லாத மாநிலமாக மாறுவதற்கு வழி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post கள்ளக்குறிச்சி விவகாரம் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.