காரைக்கால், டிச.19: காரைக்கால் வட்டார வளர்ச்சி துறை மூலம், மத்திய அரசின் ரூபன் திட்டத்தின் மூலம், நகர்ப்புற வசதிகளை போல கிராமப்புறங்களையும் மேம்படுத்துவதற்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை வகித்து பேசியது: மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் மூலம் நகர்புறங்களில் உள்ள வசதிகளை போல கிராம புறங்களையும் மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு அளித்த ரூ.30 கோடியும், புதுச்சேரி அரசு சார்பில் அளிக்கப்பட்ட ரூ.86 கோடியும் என மொத்தம் ரூ.116 கோடி செலவில் மூன்று ஆண்டுகளில் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள பெறப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் வசதி, மின்சார வசதி, ரோடு வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகளை செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.