கடன் பிரச்னை: 4 பெண் குழந்தைகளின் தாய் எறும்பு மருந்தை தின்று தற்கொலை

கொள்ளிடம், ஜூன் 27: கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் கடன் பிரச்னையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கீழ தெருவை சேர்ந்த ராஜநிதி(40). விவசாய தொழிலாளி. இவர் மனைவி வனிதா(33). இவர் தனியார் மகளிர் குழு கடன் பெற்று அதனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமம் அடைந்து வந்தார். இந்நிலையில் மனமுடைந்த வனிதா நேற்று முன்தினம் எறும்பு மருந்தை தின்று விட்டு மிக ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனிதாவுக்கு 12 வயது, 8 வயது, 6 வயது மற்றும் 4 வயதில் நான்கு பெண் குழந்தைக் உள்ளனர். நான்கு பிள்ளைகளின் தாயான வனிதா குழு கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆச்சாள்புரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post கடன் பிரச்னை: 4 பெண் குழந்தைகளின் தாய் எறும்பு மருந்தை தின்று தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: