கைம்பெண்களை மரியாதையின்றி நடத்துவதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் திருமருகல் பகுதியில் கள்ளச்சாராயம் கடத்திய 5 பேர் கைது

நாகப்பட்டினம், ஜூன் 24: திருமருகல் பகுதியில் நடந்த வாகன சோதனையில் கள்ளச்சாராயம் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருமருகல் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக திட்டச்சேரி மற்றும் திருக்கண்ணபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் வாகன தணிக்கையில் நேற்று முன்தினம் இரவு (22ம் தேதி) ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த இரண்டு பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர்.

ஆதலையூர் கீழத்தெருவை சேர்ந்த சக்திவேல்(28), ஆதலையூர் கீரங்குடி குடியானத் தெரு பகுதியை சேர்ந்த ரமேஷ்(43), என்பது தெரியவந்தது. அதேபோல் மற்றொரு இரண்டு சக்கர வாகனத்தில் வந்த திருப்புகலூர் மடவிளாகம் தெருவை சேர்ந்த சின்னதுரை(54), பாக்கம்கோட்டூர் கீழத்தெருவை சேர்ந்த தினேஷ்குமார்(29), என்பதும் தெரியவந்தது. அதேபோல் மற்றொரு இரண்டு சக்கர வாகனத்தில் வந்த சடகோபமூலையை சேர்ந்த ஜான்சன் (32) என்பது தெரியவந்தது.

இந்த 5 பேரும் கள்ளசாராயம் கடத்தியது போலீசார் விசாரணையில் தெரிவந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கைம்பெண்களை மரியாதையின்றி நடத்துவதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் திருமருகல் பகுதியில் கள்ளச்சாராயம் கடத்திய 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: