தூத்துக்குடி, டிச.11: கோயிலுக்கு சொந்தமான நிலத்தினை மீட்க கோரி கயத்தாறு ஓணமாக்குளம் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீர்த்தம் தெளித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமையில் கயத்தாறு ஓணமாக்குளம் பகுதி மக்கள் கையில் தீர்த்த குடத்துடன் வந்து ராமநாமம் கூறி கலெக்டர் அலுவலகத்தில் தீர்த்தம் தெளித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எங்கள் ஊரில் 200 ஆண்டுகள் பழமையான வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை கடைசி சனிக்கிழமை, புரட்டாசி 3ம் சனிக்கிழமை கருடசேவை நடத்தப்படும். மார்கழி மாதம் திருப்பாவை சேவிக்கப்படும். ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.