போக்குவரத்துக்கு லாயக்கற்ற ஆழ்வார்தோப்பு சாலை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

நாசரேத்.டிச.6: ஆழ்வார்திருநகரியில் இருந்து ஆழ்வார்தோப்பு வழியாக தூத்துக்குடி    செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆழ்வார்திருநகரியில் இருந்து ஆழ்வார்தோப்பு வழியாக தூத்துக்குடி செல்லும் சாலையால் கிராம மக்கள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் லாரிகள் மற்றும் வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இந்த சாலையில்  சிறு சிறு விபத்துக்களும் நடந்துவருகிறது.

இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் படாத பாடுபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆழ்வார்திருநகரி - தூத்துக்குடி  இடையே உள்ள ஆழ்வார்தோப்பு சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: