கோவை,நவ.16: கோவையில் கல்லூரி மாணவி தற்கொலையில் மர்மம் இருப்பதாக மாணவர் அமைப்பினர் கலெக்டரிடம் நேற்று புகார் அளித்தனர். ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சர்மிளா, (17). இவர் கோவையில் உள்ளஒரு கலை கல்லூரியில் முதலாமாண்டு கணிணி தொழில்நுட்பம் படித்து வந்தார். தற்போது கல்லூரியில் பல்கலைகழக தேர்வு நடந்து வருகிறது. இதில் நேற்றுமுன் தினம் நடந்த தேர்வை சர்மிளா எழுதியுள்ளார். அதில் அவர் காப்பி அடித்ததாக தேர்வு கன்காணிப்பாளர் மாணவியை மிரட்டியுள்ளார்.