திருப்பத்தூர், நவ.14: வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணிடம் கணவரின் உறவுக்காரன் எனக்கூறி மயக்க விபூதி கொடுத்த மர்ம ஆசாமி 13 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த அகரம் கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(25). திருப்பத்தூரில் வாழை மண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சண்முகி(19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் கார்த்திக் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சண்முகி மட்டும் தனியாக இருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவர், ‘நான் உங்கள் கணவரின் உறவுக்காரர். எனது மகளுக்கு காதணி விழா வைத்துள்ளேன். நீங்கள் அனைவரும் கண்டிப்பாக வரவேண்டும்’ என்று கூறியுள்ளார்.