கூட்டுறவு வாரவிழாவை யொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி

தூத்துக்குடி, நவ.14: தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கூட்டுறவு வாரவிழா போட்டி நடந்தது. அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்தது. போட்டிக்கு மண்டல இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் இந்துமதி, தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் சிவகாமி, திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குநர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வரும் 19ம் தேதி நடைபெறும் கூட்டுறவு வாரவிழாவில் பரிசு வழங்கப்படுகிறது. இதில், கூட்டுறவு சார்பதிவாளர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: