திருச்செந்தூரில் பக்தர்களுக்கு திமுக இளைஞர் அணியினர் அன்னதானம்

திருச்செந்தூர், நவ.14: திருச்செந்தூரில் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹார விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அறிவுரையின் பேரில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.ஜெ ஜெகன் தலைமை வகித்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப் பாளர் பாலபொய்சொல்லான், தொண்டரணி ஹரி, சண்முகசுந்தரம், ராஜ், இளைஞர் அணி ராயல்சுந்தர், கேடிசி முருகன், பிரவின் கலந்து கொண்டனர்.

Related Stories: