கோவில்பட்டி, நவ.14: கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கோவில்பட்டி அருகே இந்திராநகரை சேர்ந்த துரைப்பாண்டி மகன் ராஜேஷ்குமார் (18) கட்டிட தொழிலாளி. இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த நவநீதன் மகன் மணிகண்டன் (25) என்பவருக்கும் இடையே கடந்த தீபாவளி அன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து
வந்தது.
இந்நிலையில் கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் கண்மாய் கரை வழியாக சென்று கொண்டிருந்த ராஜேஷ்குமாரை வழிமறித்த மணிகண்டன் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த ராஜேஷ்குமார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் மணிகண்டன் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.